மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், உணவு சாப்பிட்ட 58 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று குடியரசு தினவிழாவில் வழங்கப்பட்ட உணவு மற்றும் இனிப்புகள் சாப்பிட்ட 58 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகே உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரு மாணவியின் நிலை மட்டும் மோசமாக இருந்ததால், அவர் ரேவாவில் உள்ள அரசு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.